இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட பிரான்சிஸ் யோசப் பாதிரியார் எங்கே?

இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணைடைந்த பிரான்சிஸ் யோசப் பற்றிய தகவல்களை பெற்றுத்தருமாறு யாழ் ஆயர் இல்லம் கோரிக்கை விடுத்துள்ளது.
வன்னிப்பகுதியில் கடமையாற்றி வந்த குறித்த பாதிரியார் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுக்கு மக்களோடு வந்தபோது அவரை கைது செய்த சிறிலங்காப் படையினர் இது வரை அவர் தொடர்பான தகவல்களை வெளியிடவில்லை.
இவர் தொடாடபான தகவல்களை சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்றுத்தருமாறு அண்மையில் யாழ் குடா நாட்டுக்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதியிடம் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ் ஆயர் இல்லம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் படுகொலைகள் தற்போது ஆதாரங்களுடன் வெளிவரும் இந்நிலையில் பாதிரியார் தொடர்பாக – அவரின் நிலை தொடர்பாக அச்சம் அடைவதாக யாழில் பாதிரியார் ஒருவர் சங்கதி இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.

About malathi arulmani

என்னை பற்றி சொல்ல பெரியதாக ஒன்னும் இல்லைங்க .electronics communication படித்து கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்து வருகிறேன்
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment