விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப்பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்நாட்டு அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற சீமானின் “நாம் தமிழர் அரசியல் மாநாட்டில்” கலந்து கொண்ட அவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளதுடன் “மலேசியாவில் எங்கள் ஆட்சி அமைந்தால் அந்த இயக்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவோம்” என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சுக்கும் அறிக்கையொன்றை கையளித்ததை அடுத்து அந்த அறிக்கை மலேசிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோரிக்கை கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது. குறித்த கோரிக்கைக் கடிதத்திலேயே பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மலேசிய அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது.