யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் கைது!

யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் சிலாபம் பகுதியை பிறப்பிடமாகவும், யேர்மனி பிராங்போர்ட் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஐம்பது அகவையுடைய இவர், யேர்மனியில் இருந்து கடந்த புதன்கிழமை கொழும்பை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

யேர்மனியில் கடந்த ஆண்டு தமது அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்ட தொடருந்து மறியல் போராட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள், பிராங்போர்ட்டில் உள்ள இந்திய உப தூதரகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் இவர் முன்மையான பாத்திரத்தை வகித்ததாகவும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

About malathi arulmani

என்னை பற்றி சொல்ல பெரியதாக ஒன்னும் இல்லைங்க .electronics communication படித்து கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்து வருகிறேன்
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment